×

விமான படை தளபதி இலங்கைக்கு பயணம்

கொழும்பு: விமான படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நான்கு நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் எஸ்.கே.பத்திரனாவின் அழைப்பின் பேரில், விமானப்படை தளபதி சவுத்ரி இலங்கைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மாணவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதுடன் இலங்கை விமானப்படை அகாடமியையும் அவர் பார்வையிடுவார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை இந்தப்பயணம் மேம்படுத்தும் என இலங்கை தெரிவித்துள்ளது.விமான படை தளபதி சவுத்ரி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உட்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இரு நாட்டு விமான படைகளுக்கு இடையே ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், கூட்டு பயிற்சிகள், தொழில்நுட்ப அனுபவ பகிர்வுகள், சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. வரும் 6ம் தேதி அவர் இந்தியா திரும்புகிறார்.

The post விமான படை தளபதி இலங்கைக்கு பயணம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Commander ,Air Marshal ,V.R. R.R. Saudri ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...